நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது ..

by Lifestyle Editor

நாளை சித்திரை மாதம் முதல் நாள் சுபகிருது தமிழ் வருடம் முடிந்து சோபகிருது தமிழ் வருடம் தொடங்குகிறது.

குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் நேற்று வரை கிலோ ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூவும் ரூ.550ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. குமரி மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி என அனைத்து பகுதிகளிலும் மல்லிகை, அரளிப்பூ, வெள்ளை செவ்வந்தி, மரிக்கொழுந்து என பல பூக்கள் விலை உயர்ந்துள்ளன.

தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதும், விலை கூடியுள்ளதும் பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment