தொடர்ந்து 2வது நாளாக சரிவு… சென்செக்ஸ் 105 புள்ளிகள் வீழ்ச்சி…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 105 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அமெரிக்காவில் முன்பேர வர்த்தகம் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,313 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,057 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 103 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.87 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.67 புள்ளிகள் குறைந்து 57,892.01 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 17.60 புள்ளிகள் சரிவு கண்டு 17,304.60 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment