அம்மனால் அம்பலமான தாராவின் சூழ்ச்சி ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோயிலில் மாரி மயங்கி கிடக்க, அம்மன் மாரி உருவத்தில் தோன்றி சூர்யா வீட்டுக்கு வருகிறார். சூர்யா ஜாஸ்மினின் கழுத்தில் தாலி மறைத்து வைத்திருக்கும் மாலையை போட போன சமயத்தில் மாரி வேடத்தில் வந்த அம்மன் ‘நிறுத்துங்கள்’ என சத்தம் போட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மயக்கத்தில் இருந்த மாரி எப்படி இங்கு வந்தாள் என ஜாஸ்மின் குழப்பத்தில் இருக்க தாரா இப்போ எதுக்கு இந்த மாலை மாத்தும் பங்ஷனை நிறுத்த சொல்லுற என கோபப்பட, அம்மன் இது மாலை மாத்தும் பங்க்ஷன் கிடையாது, உங்களுக்கு மறைமுகமாக கல்யாணம் செய்து வைக்க போட்ட திட்டம் என சொல்லி மாலையில் இருந்து தாலியை எடுத்துக்காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே சூர்யா உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் நீங்க சொல்ற எந்த ஒரு விஷயத்தையும் தட்டாமல் சரின்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தேன் அப்படி இருக்கும்போது ஏன் இப்படி பண்ணீங்க என தாராவிடம் கோபப்படுகிறான். உங்க மேல இருந்த மரியாதையே போச்சு என சத்தம் போடுகிறான்.

இந்த நேரத்தில் ரெஜிஸ்டர் இந்த கல்யாணம் நாம நினைச்ச மாதிரி நின்னு போச்சு என சொல்லும்போது அசிஸ்டன்ட் இருங்க கண்டிப்பா ஜாஸ்மினுக்கு அடிபடும். என்ன ஆகுதுன்னு பார்த்துட்டு போகலாம் என சொல்கிறான். அடுத்து மாரி கல்யாணத்தை நிறுத்திய கோபத்தில் ஜாஸ்மின் பூத்தொட்டியை தூக்கி அவளை அடிக்க வர படிக்கட்டு தடுத்து கீழே விழுகிறாள். பிறகு ரெஜிஸ்டர் நீ சொன்னா மாதிரியே நடந்து போச்சு என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ரெஜிஸ்டர் வெளியே வரும் போது மயக்கம் தெளிந்த மாரி ஆட்டோவில் வந்து வீட்டு வாசலில் இறங்க அவளை பார்த்த ரெஜிஸ்டர் அதிர்ச்சி அடைகிறார். நீ என்னம்மா உள்ள இருந்த இப்போ இங்கே இருக்க என கேட்க குழம்பும் மாரி நான் இப்பதான் கோவிலிலிருந்து இங்கே வருகிறேன் என சொல்கிறாள்.

வீட்டுக்குள் சென்றும் மாரி அதையே சொல்ல அனைவரும் அப்போ மாரி உருவத்தில் வந்தது யார் என குழம்புகின்றனர். சங்கர பாண்டி அப்போ அந்த அம்மன் தான் மாரி உருவத்தில் வந்திருக்காள். மாரிக்கு ஆதரவா அந்த சாமியும் வருது ஆவியும் வருது என புலம்புகிறார்.

அடுத்து மாரி ரூமுக்கு வர, சூர்யா நீ மட்டும் மாலையிலிருந்து தாலியை எடுத்துக் காட்டலன்னா இந்நேரம் இந்த கல்யாணம் நடந்திருக்கும் என சொல்லி புலம்ப மாரி அப்போ தனது உருவத்தில் வந்தது யார் என குழம்புகிறாள்.

தான் கோவிலில் மயக்கம் அடைந்த பிறகு அந்த அம்மன்தான் வந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ளும் மாரி கோவிலுக்கு சென்று அம்மனை வணங்கி வழிபட்டு நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment