சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்வு ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிய போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. விப்ரோ நிறுவன பங்கின் விலையில் மாற்றம் இல்லை. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,042 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,453 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 136 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.257.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.10 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.91 புள்ளிகள் உயர்ந்து 58,214.59 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 44.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,151.90 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment