பிரான்ஸ் மக்களுக்கு நடைமுறையாகிறது புதிய திட்டம் ..

by Lifestyle Editor

பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய செயற்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் பொருட்கள் வாங்கும் போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டணப்பட்டியல் வழங்கப்படமாட்டாது எனவும், நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறை :

இந்த திட்டம் காகிதங்களை வீணாக்குவதை தடுக்கவும், கழிவுகள் சேருவதை தடுக்கவுமே நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மக்கள் கொள்வனவு பொருட்களுக்கான கட்டணப்பட்டியல் டிஜிட்டல் முறையில் தொலைபேசிகளுக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கப்படும்.

ஏப்ரல் முதல் நடைமுறை :

இந்த நடைமுறை கடந்த வரும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, முதலில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மூன்று மாதங்கள் பிற்போடப்பட்டு, எதிர் வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment