கண்ணம்மாவாக மாறியதும் புதிய சிக்கலை சந்திக்கும் சித்ரா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீசன் 2ல் சித்ராவாக இருந்த வினுஷா கண்ணம்மாவாக மாறியுள்ள நிலையில், அவர் சந்திக்கும் அடுத்த பிரச்சினை ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீசன் 2

பாரதி கண்ணம்மா சீரியல் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் குறித்த சீரியல் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது.

இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில், ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த வினுஷாவே நடித்து வருகின்றார்.

பாரதியாக ரோஜா சீரியல் புகழ் நடிகர் சிப்பு நடித்து வருகின்றார். அவரது தாயாக முதல் பாகத்தில் நடித்த சௌந்தர்யாவே நடித்து வருகின்றார். ஆனால் கணவரை இழந்த பெண்ணாக நடித்து வருகின்றார்.

சித்ரா மாறிய கண்ணம்மாவின் புதிய பிரச்சினை

குறித்த சீரியலில் பாரதியாக இருக்கும் நடிகர் சிப்பு ஊதாரியாக இருந்து வருகின்றார். மற்றொரு புறம் சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷா சிறைக்கு சென்று விடுதலை ஆகியுள்ளார்.

விடுதலை ஆகி வீட்டிற்கு வந்த சித்ராவை உறவினர்கள் அடித்து விரட்டியதால் பேருந்து ஒன்றில் அமர்ந்து செல்கையில், கண்ணம்மாவின் அறிமுகம் கிடைக்கின்றது.

அத்தருணத்தில் சித்ராவைக் கொலை செய்ய வந்த ரவுடிகள் கண்ணம்மாவைக் கொலை செய்ததால், தனது பெயரை கண்ணம்மாவாக மாற்றி அவர்களின் வீட்டிற்கே சித்ரா செல்கின்றார்.

ஆனால் கண்ணம்மா வீட்டிற்கு சென்ற வினுஷாவிடம் அவரது தந்தை நீ தான் கண்ணம்மா என்று எப்படி நம்புவது என்ற கேள்வியை வைத்து சிக்கலை ஏற்படுத்துகின்றார்.

மறுபுறம் மரணப்படுக்கையில் இருந்த தாய் கண்ணம்மாவை பார்த்ததும் உடனே எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்துள்ளதையும் காணமுடிகின்றது.

Related Posts

Leave a Comment