ஆஸ்திரியாவின் பாதாள அறை ஒன்றினுள் இருந்து குழந்தைகள் மீட்பு!

by Lankan Editor

ஆஸ்திரியாவின் கைவிடப்பட்ட பாதாள அறை ஒன்றினுள் பிரித்தானிய குழந்தைகள் ஜவர் உட்பட ஆறு பேர் வசிப்பதாக கண்டுபிடிக்கப்படுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவ்ர்களில் 54 வயதினையுடைய ஒரு நபர் மற்றும் 5 குழந்தைகளும் மீட்க்கப்பட்டனர்

குறித்த நபர் சமூக சேவையாளர்களை தாக்கிய நிலையில் பொலிசார் வந்ததும் பாதாள அறையில் பதுங்கிக் கொண்டார். எனினும் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர் இந் நிலையில் பாதாள அறையில் இருந்து பல துப்பாக்கிகள் பொலிசாரால் மீட்க்கப்பட்டன அத்துடன் அவை சட்டபூர்வமற்றவை என்பதும் தெரிய வந்துள்ளது.

கைதான  54 வயதுடைய நபர் வலதுசாரி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேக்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts

Leave a Comment