அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: மகுடம் சூடினார் அர்யானா சபெல்க்கா

by Lankan Editor

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பெலரஸ் வீராங்கனை அர்யானா சபெல்க்கா வெற்றிபெற்றுள்ளார்.

கஸகஸ்தான் வீராங்கனை எலைனா ரைபகினாவுடன் இறுதி போட்டியில் மோதிய அவர், முதல் செட்டை 4-6 என இழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டெழுந்த அர்யானா சபெல்க்கா, அடுத்த செட்களை 6-3 மற்றும் 6-4 என்ற அடிப்படையில், வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இது பெலரஸைச் சேர்ந்தவர் வீரர் அல்லது வீராங்கனை பெறும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment