பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு… சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்தது..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவு கண்டது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, முதலீட்டளார்கள் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம்19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. சன் பார்மா நிறுவன பங்கின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,201 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,297 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 134 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.40 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது .

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 293.14 புள்ளிகள் குறைந்து 60,840.74 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 85.70 புள்ளிகள் சரிவு கண்டு 18,1105.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment