தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 361 புள்ளிகள் அதிகரிப்பு..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே சரிவு கண்ட போதிலும் பின்னர் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சீனா கோவிட் கட்டுபாடுகளை தளர்த்தியது போன்ற தகவல்கள் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக அமைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,579 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 919 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.44 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.53 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 361.01 புள்ளிகள் உயர்ந்து 60,927.43 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 127.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,141.75 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment