மறுபடியும் மொதல்ல இருந்தா.. பாரதி கண்ணம்மா …!

by Lifestyle Editor

பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை வருடமாக கண்ணம்மா மீது இருக்கும் சந்தேகத்தால் பாரதி பல மோசமான விஷயங்கள் செய்து வந்தார். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அதன் ரிசல்ட் பாரதிக்கு தெரியவந்தால் இந்த சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பாரதிக்கு மொத்த உண்மையும் தெரிந்தாலும் சீரியல் இன்னும் நீண்டுகொண்டு தான் செல்கிறது. பாரதியிடம் இருந்து விலகி கண்ணம்மா இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு கிராமத்திற்கு சென்றுவிடுகிறார். அவரை பின்தொடர்ந்து பாரதியும் அங்கு வர, ஒருகட்டத்தில் அந்த கிராமத்தில் ஹாஸ்பிடல் இல்லை என்பதற்காக போராட்டம் நடத்துகிறார்.

பாரதியின் போராட்டத்தை பார்த்து மினிஸ்டர் அந்த ஊருக்கு வந்து ஹாஸ்பிடல் கட்டி தருவதாக வாக்கு கொடுக்கிறார்.

ஆனால் அதற்கு பிறகு தான் பாரதிக்கு ஷாக் காத்திருக்கிறது. பாரதி கையில் டைவர்ஸ் பேப்பர் கொடுத்து, நாம கோர்ட்டில் சந்திக்கலாம் என கூறிவிடுகிறார். பாரதி முதலில் போட்ட வழக்கு தான் அது.

மறுபடியும் மொதல்ல இருந்து டைவர்ஸ் கேஸை ஆரம்பிக்கிறார் பாரதி கண்ணம்மா இயக்குனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment