கார்த்திக் மனைவியாக போகும் தீபா – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட் ..

by Lifestyle Editor

கார்த்திக் மனைவியாக போகும் தீபா, அபிராமியை பழிவாங்க சிவா போடும் திட்டம் என கார்த்திகை தீபம் சீரியலில்இன்றைய எபிசோட் அப்டேட் .

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிவா தீபாவை வீட்டிற்கு வந்து இறக்கி விடுகிறான். தீபா ஃபேமிலியோடு நெருக்கமாகிறான்.

அப்போது தீபாவின் கல்யாணம் தடைப்பட்டு போகும் விஷயத்தை தீபாவின் அப்பா சிவாவிடம் சொல்ல சிவா நானே தீபாவிற்கு நல்ல குடும்பமாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்ல குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷம் அடைய இதை மறைந்திருந்து பார்க்கும் ராஜஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள்.

இதனையடுத்து சிவா தன் பிஏ ராஜுவிடம் தன் தங்கச்சியின் மரணத்தின் காரணமான அபிராமி குடும்பத்தை பழிவாங்கப் போவதாகவும் அதற்காக இந்த தீபாவை அந்த வீட்டுக்கு மருமகளாக்க போகிறேன் என்று சொல்ல ராஜிவ் அதிர்ச்சியாகிறான். அதாவது, இந்த தீபா தான் அந்த அபிராமியின் மருமகள், நான் நடத்தி காட்டுகிறேன் என்று சொல்கிறான்.

பின்னர் ராஜ ஸ்ரீ வீட்டில் ரூபஸ்ரீ கார்த்திக் ஞாபகமாகவே இருக்க ராஜஸ்ரீ காரணம் கேட்க ரூபஸ்ரீ கார்த்திகை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை சொல்ல ராஜ ஸ்ரீ தனக்கும் உன்னை அபிராமி வீட்டுக்கு மருமகளாக்க வேண்டும் என்று ஆசையை சொல்கிறாள்.

பின்னர் மறுநாள் காலை அபிராமி புரோக்கர்களை அழைத்து கார்த்திக்கு பெண் பார்க்க போகும் விஷயத்தை சொல்ல பெண் அழகாகவும் அறிவாகவும் திறமையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டும் அடுக்கடுக்காக பல விஷயங்களை கூறுகிறார்.

அபிராமி எதிர்பார்த்தபடி கார்த்திக்கு பெண் அமையுமா? ராஜஸ்ரீ, ரூபஸ்ரீயின் ஆசை நிறைவேறுமா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment