பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பு… சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்ந்தது.

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் ச்நதையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம்16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,091 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,505 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 188 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.285.89 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.1.36 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 211.16 புள்ளிகள் உயர்ந்து 62,504.80 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 50.00 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,562.75 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment