கோபியை பற்றி செல்வி அக்கா சொல்லும் உண்மை.. பாக்கியலட்சுமியில் புது ட்விஸ்ட்!

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் வாரத்திற்கு ஒரு ட்விஸ்ட், கோபியின் தகிடுதத்தம் என கதைகளம் ஜெட் வேகத்தில் செல்கிறது.

விறுவிறுப்புக்கு பரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நடவடிக்கைகயில் ஏற்பட்டுள்ள மாற்றம் மொத்த குடும்பத்தையும் யோசிக்க வைத்துள்ளது. அடிக்கடி வீட்டுக்கு வராமல் போவது, சம்மந்தம் இல்லாம பாக்கியாவை திட்டுவது என கோபியின் அம்மாவே இதை நோட் செய்ய தொடங்கி விட்டார்.

விஜய் டிவி சீரியல்கள் லிஸ்டில் டாப் ரேட்டிங்கில் தற்போது சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். வாரத்திற்கு ஒரு ட்விஸ்ட், கோபியின் தகிடுதத்தம் என சீரியலின் விறுவிறுப்பான கதைகளம் ஜெட் வேகத்தில் செல்ல ரசிகர்கள் மிஸ் செய்யாமல் எபிசோடுகளை பார்த்து விடுகின்றனர். இன்றைய எபிசோடில், ராதிகா வீட்டில் இரவு முழுவதும் தங்கி இருக்கும் கோபிக்கு ஃபோன் மேல் ஃபோன் செய்கிறார் பாக்கியா. ஆனால் ஒரு ஃபோன் காலை கூட கோபி எடுக்கவில்லை. பக்கத்தில் இருக்கும் ராதிகாவிடம் ஆபீஸ் கால் என பொய் சொல்கிறார்.

இனியாவிடம் பாக்கியா விஷயத்தை சொல்ல, உடனே ஃபோனை எடுக்கிறார் கோபி. மகள் மீது இருக்கும் பாசம் அப்படி. உடனே இனியா இதை வைத்து பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார். இது இப்படி இருக்கையில், மகளின் பேச்சைக் கேட்டு உடனே வீட்டுக்கு வருகிறேன் என்கிறார் கோபி. சமையல் ஆர்டர் கணக்கு வழக்குகளை செல்வி அக்காவும் பாக்கியாவும் பார்க்க, லாபம் போக மிச்ச பணத்தை கோபியிடம் தர போவதாக பாக்கியா கூறுகிறார்.

இந்த நேரத்தில் தான் செல்வி அக்கா அந்த முக்கியமான விஷயத்தை சொல்கிறார். அதாவது, கோபி நீங்க நினைக்குற அளவுக்கு நல்லவரு இல்லை அக்கா.. கொஞ்சம் யோசீங்க.. எனக்கு இன்னும் அந்த சந்தேகம் இருக்கு என்கிறார். பாக்கியாவும் அதைப்பற்றி யோசிக்கிறார். அடிக்கடி கோபி வீட்டுக்கு வராமல் போவது, ராதிகா வீட்டு வாசலில் கார் நிற்பது என பாக்கியாவுக்கும் தப்பாக தோன்றுகிறது.

இந்த நேரத்தில் தான் கோபி வீடு வந்து சேர்கிறார். பாக்கியா அக்கறையாக விசாரிக்க, கோபி கோபத்தை காட்டி பாக்கியாவை திட்டி தீர்க்கிறார். பாக்கியா அந்த சமையல் ஆர்டருக்கு சென்றதை குத்தி காட்டி அக்கறை இருப்பது போல் நடிக்காதே என்கிறார். பாக்கியா பேசுவதை துளி கூட கேட்காமல் கோபி கத்த, அங்கே வரும் ஈஸ்வரி அம்மா பதிலுக்கு கோபியை அடக்குகிறார். இரவில் ஃபிரண்ட் வீட்டில் கோபி தங்குவது பற்றி அவரும் கேள்வி எழுப்ப, ஆஃபீஸ் வேலை என மழுப்புகிறார் கோபி. ஆனாலும் நீ சரியில்லைப்பா என ஒரே வார்த்தையில் முடிக்கிறார் ஈஸ்வரி அம்மா.

இந்த பிரச்சனை எல்லாம், முடிந்த பின்பு, பாக்கியா கோபியிடம் செழியன் – ஜெனி விஷயத்தை பற்றி பேசுகிறார். புரமோவில் செழியன் அடி வாங்கும் காட்சிகள் நாளை ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. அதற்காக தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment