யாருக்குமே தகுதி இல்லைனு நினைக்கிறீங்களா? சிம்பு அதிரடி

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு இன்று ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் தாளித்து எடுத்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரம் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த விளையாட்டில் சண்டை, போட்டி என அதிகமாக இருந்து வருகின்றது.

ஐந்து வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்று யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

வெளியேறிய போட்டியாளர்கள்

14 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த போட்டியில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபினய், வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி ஆகியோர் வெளியேறிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக சுரேஷ் தாத்தா மீண்டும் வந்துள்ளார்.

தொடர்ந்து சதீஷ், ரம்யா உள்ளே வந்துள்ளனர். ரம்யா உள்ளே வந்ததும் அவரது ரசிகர்கள் பதற்றத்துடனே காணப்படுகின்றனர். காரணம் விஷப்பாட்டில் என்று பெயர் வாங்கிய இவர் தற்போது இந்த அல்டிமேட்டில் என்ன செய்ய இருக்கின்றார் என்ற எதிர்பார்ப்பே…

கோபத்தில் சிம்பு

ரேகிங் முடிந்துவிட்டது தற்போது ரேங்கிங்கிற்கு வரலாமா என்று கூறிய அவர், நிரூப் பாலா மட்டும் தான் உறுதியான போட்டியாளரா என்று கேட்டதுடன், மற்றவர்கள் யாருக்குமே தகுதி இல்லைனு நினைக்கிறீங்களா என்று சிம்பு கேட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment