அமீருடன் கல்யாணமா? முதன்முறையாக ரகசியத்தை சொன்ன பிக் பாஸ் பாவ்னி!

by Column Editor

பிக் பாஸ் பாவ்னி ரசிகர்கலள் கேட்ட கேள்விக்கு தைரியமாக சில பதில்களை தந்து இருக்கிறார்.

பிக் பாஸ் பாவ்னி, சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதுமட்டுமில்லை பாவ்னிக்கு அமீருடன் திருமணமா? என்ற கேள்விக்கும் முதன்முறையாக வெட்கத்துடன் பதில் கூறியுள்ளார்.

சின்னத்திரை ரசிகர்களை குதுகலப்படுத்தும் வகையில் தமிழ் டிவி சேனல்கள் பல வித்தியாசமான மற்றும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தயாரித்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி கடந்த 5 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது. சண்டைகள், சச்சரவுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன இந்த நிகழ்ச்சியில் வெறும் சண்டைக்கு மட்டுமில்லை ரொமான்ஸூக்கும் பஞ்சம் இருக்காது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 ஜனவரி 16-ஆம் தேதி வெற்றிக்கரமாக முடிந்தது.

இதில் இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் – சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவ்னி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 பேர் நேரடி போட்டியாளர்களாக இருந்தார்கள். டான்ஸர் அமீர் மற்றும் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல சீரியல் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளர்களாக நுழைந்தனர்.

அமீரின் என்ட்ரிக்கு பிறகு பிக் பாஸ் ஸ்கிரிப்ட் அப்படியே மாறியது. அதுவரை தாமரை பிரியங்கா சண்டை, ராஜூ காமெடி, சிபி அக்‌ஷரா மோதல் என சென்று கொண்டிருந்த ஷோவில் காதல் ட்ராக் ஆரம்பமானது. அதுவும் ஒன் சைடு லவ். பாவ்னியை காதலிப்பதாக அமீர் சொல்ல, அது முத்தம் வரை சென்றது. பாவ்னி – அபிநய் விஷயத்தில் அமீர் உதவியதால் அமீர் மீது பாவ்னிக்கு சாஃப்ட் கார்னர் வந்தது. இப்படித்தான் பாவ்னிக்கும் அமீருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ஃபைனல்ஸ் வரை இருவரும் ஒன்றாகவே இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் எல்லா பேட்டிகளிலும் அமீர் பாவ்னியை காதலிப்பது நிஜம் என்றே கூறி வந்தார். சமீபத்தில் கூட பிக் பாஸ் அல்டிமேட்டில் பாவ்னி பற்றி அனிதா பேசிய சர்ச்சை கருத்துக்கு அமீர் சண்டைக்கு வந்தார். அதற்கு பாவ்னியும் ரியாக்ட் செய்து இருந்தார். சோஷியல் மீடியாவில் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று ஒரு கூட்டம் கொண்டாடி வருகிறது.

இந்த நேரத்தில் தான் பாவ்னி கல்லூரி விழாவில் திருமணம் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது. அதாவது பெண்கள் தினத்தன்று சென்னையில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் பாவ்னி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பாவ்னி தைரியமாக சில பதில்களை தந்து இருந்தார். அப்போது தான் பாவ்னியிடம் கல்யாணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதுவும் அமீருடன் கல்யாணமா? என்று கேட்டனர்.

அதற்கு பாவ்னி “ அமீர் நலமாக இருக்கிறார். நீங்கள் அவரையும் அழைத்து இருக்க வேண்டும். நாங்கள் எப்போதுமே நல்ல நண்பர்கள் தான். இப்போதும் அப்படித்தான் இருக்கிறோம். கல்யாணத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எங்கள் குடும்பத்தினரும் அதில் ஆர்வமாக தான் இருக்கிறார்கள். அமீர், அமீர் என்று சொல்கிறார்கள். தெரியவில்லை. அப்படி ஒன்று நடந்தால் கட்டாயம் உங்களிடம் முதலில் ஷேர் செய்கிறேன்” என்றார்.

Related Posts

Leave a Comment