பிக்பாஸ்ஸில் அடுத்தடுத்து கிளம்பும் பூகம்பம்!

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரங்களில் வெளியான போட்டியாளர்களை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என அனைவரும் பிக்பாஸ் முயற்சி செய்து வருகிறார்.

இதற்கு சாய்ந்து கொடுக்கும் படி போட்டியாளர்களும் 3 டாஸ்க்கிலும் தோற்று விட்டார்கள்.

இந்த வாரம் வெளியே சென்ற 3 போட்டியாளர்களும் உள்ளே வருவதற்காக தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

3 வது டாஸ்க்கில் ஒரு பந்தை சரியாக உருட்ட தெரியாமல் போட்டியாளர்கள் விளையாடியதை பார்த்த பிக்பாஸ் அவர்களை பங்கமாய் கலாய்த்துள்ளார்.

இனி என்ன பூகம்பம் கிளம்ப போகிறது என அனைவரும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment