தொடர்ந்து 4வது நாளாக பங்குச் சந்தைகளில் ஏற்றம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்தது, கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க.வின் வலுவான வெற்றி போன்ற சாதகமான அம்சங்கள் பங்குச் சந்தைகளின் உயர்வுக்கு வழிவகுத்தன. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,071 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,268 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 119 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.252.82 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.02 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.91 புள்ளிகள் உயர்ந்து 55,550.30 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 35.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,630.45 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment