உக்ரைனுக்கு 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி!

by Column Editor

ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது.

உக்ரைனிய நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுத்துறை சம்பளம் வழங்குவதற்கு இந்த நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 290 மில்லியன் டொலர்களுக்கு கூடுதலாக பணம் செலுத்துவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிதி உலக வங்கியின் பல நன்கொடையாளர் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும்.

Related Posts

Leave a Comment