இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

by Column Editor

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளிலுமே இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்த நிலையில், நாளை பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. காலை 9,30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டி விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் விராட் கோலில் இந்த தொடரில் மற்றொரு சாதனையையும் படைக்க உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 7,962 ரன்கள் எடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இன்னும் 38 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதனிடையே டி20 தொடரில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் டி20 தொடரை போல டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment