கடைசியில் கோபி பற்றிய உண்மை ஈஸ்வரி அம்மாவுக்கே தெரிஞ்சு போச்சு.. பாக்கியலட்சுமியில் ட்விஸ்ட்!

by Column Editor

பாக்கியலட்சுமி ஈஸ்வரி, தனது மகன் கோபியா இப்படி? என அதிர்ச்சியில் நிற்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்டாக கோபியின் நிஜ முகம் அவரின் அம்மா ஈஸ்வரிக்கு தெரிய வருகிறது. இதனால் வருத்தத்துடன் அவர் செய்யும் செயல் பாக்கியா மற்றும் கோபிக்கு அதிர்ச்சியை தருகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில். கோபி மாட்டுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கோபியின் நிஜ முகம் குறித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. குறிப்பாக இவ்வளவு நாட்களாக கோபி தப்பே செய்தாலும் தலையில் தூக்கி வைத்து கொண்டிருந்த கோபியின் அம்மா ஈஸ்வரியே, தனது மகன் இப்படிதானா? என ஒரு கனம் நினைக்க வைத்து விட்டார் கோபி. பாக்கியலட்சுமி சீரியலின் இந்த புரமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலின் ஒன்லைன் இதுதான். திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக மட்டும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இல்லத்தரசியின் கதை.இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும், மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது போன்ற கதைக்களத்தால் சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது கோபி, ராதிகாவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டார். வரும் நாட்களின் கோபி – ராதிகா திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன.

ஏற்கெனவே கோபி பற்றிய உண்மை, அவரின் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. கோபி – ராதிகா திருமணத்தை பற்றி, மயூ வீட்டுக்கு வந்து சொன்ன போது, கோபத்துடன் தனது மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர் ராமமூர்த்தி. இதனால் அவர் திடீரென்று தவறி விழுந்து இப்போது முடக்குவாதத்தால் பேச முடியாத நிலைக்கு சென்று விட்டார்.

இப்படி இருக்க, அவரின் மருத்துவ செலவுக்கு கோபி மற்றும் செழியன் செலவு செய்தனர். இப்போது இருவரும் தங்களிடம் பணம் இல்லை என கைவிரித்து விட்டனர். இதனால் பாக்கியா இரவு முழுவது தூங்காமல் வேலை பார்த்து கோபியின் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் கோபிதன்னிடம் பணம் இல்லை என பாக்கியாவிடம் சொல்லி சண்டை போடுகிறார். அதுமட்டுமில்லை அப்பாவுக்கு மருத்துவ செலவு செய்ய ஆன பணத்தை பற்றியும் சொல்லி காட்டுகிறார். இது கோபியின் அம்மா ஈஸ்வரியின் காதில் கேட்கிறது,.

தனது மகன் கோபியா இப்படி? என அதிர்ச்சியில் நின்றவர், முகத்தில் அடிப்பது போல் மொத்த நகையையும் கொண்டு வந்து தனது மருமகள் பாக்கியாவிடம் தந்து செலவுகளை பார்த்து கொள் என்கிறார். இது கோபிக்கு பெரும் அவமானமாக மாறிவிடுகிறது.

Related Posts

Leave a Comment