கமல் சொல்லியே கேட்காத வனிதா.. என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில் ?

by Lifestyle Editor

நான் சொன்ன டாஸ்க்கையாவது பண்ணுங்க என வனிதாவிடம் கமல் கோவமாக பேசிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்தை பிக்பாஸ் வீட்டில் சொல்லவிடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் வாயை அடைக்கவும் இதை பயன்படுத்தலாம் என்று ஹவுஸ்மேட்டுகளிடம் சில நிப்பிள்களை கமல் கொடுக்கிறார். இதையடுத்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்டுகளும் வனிதாவின் வாயில் அந்த நிப்பிளை வைக்கின்றனர். எதற்காக வனிதாவிற்கு இந்த நிப்பிள் கொடுக்கப்பட்டது என்றும் கமலுக்கு ஹவுஸ்மேட்ஸ் விளக்கம் கொடுக்கின்றனர்.

முதலில் பேசும் சினேகன், நீங்க சொல்லும்போது பேசிவிட்டு சொல்லாதபோது பேசுவதற்கு நான் பொம்மை இல்லை என்று என்பதற்காக கொடுக்கிறேன் என்கிறார். இதையடுத்து பேசும் ஜூலி, அவங்க வந்து பாசம் காட்டினால் அது பாசமாகும். அதுவே நான் உரிமையாக வந்த கேட்டால் அதை சேஃப் கேமாக பார்க்கிறார். அடுத்த பேசும் அபிராமி, எங்களை யாரு பேசவிடாமல் இருக்கிறாங்க. அவங்களுக்குதான் நான் இதை கொடுக்கிறேன் என்கிறார்.

நான் தேவையில்லாத இந்த பிக்பாஸ் வீட்டில் பேசாமல் இருக்கேன் என்றால் அது வனிதா அக்காவிடம் மட்டும் தான் என்று அனிதா சம்பத் சொல்கிறார். இப்படி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்டுகளும் வனிதாவுக்கு எதிராக பொங்கியிருக்கிறார்கள். அதன்பிறகு பேசும் கமல் வனிதா, நீங்க நிப்பிள் கேமை ஆரம்பிங்க என சொல்கிறார். அதற்கு நான் இதை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை என வனிதா கூறுகிறார். அப்போது பேசும் கமல், நான் கொடுக்கும் டாஸ்க்கை கூட பண்ண மாட்டறாங்க என ஆதங்கத்துடன் தெரிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment