‘நான் பொம்மை இல்லை’.. ஷாரிக்கிடம் வாக்குவாதம் செய்த வனிதா !

by Column Editor

வனிதா மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட போட்டி அறிவிக்கப்படுகிறது. இதற்காக புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி கார்டன் ஏரியாவில் 11 தொட்டில்கள் வைக்கப்படுகிறது. அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்கும்போது பொம்மையை தொட்டிலில் போடவேண்டும் என்று கூறப்படுகிறது. யாருடைய பெயரில் உள்ள பொம்மை தொட்டிலில் இல்லையோ அவர் டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுவார்‌.

இதையடுத்து டாஸ்க்கில் விளையாட போட்டியாளர்கள் தயாராகின்றனர். சொன்னபடி குழந்தை சத்தம் கேட்கும்போது போட்டியாளர்கள் ஓடிச்சென்று பொம்மைகளை தொட்டில்களில் போடுகின்றனர். இந்த டாஸ்க்கில் தாடி பாலாஜி பொம்மையை போடாததால் வெளியேற்றப்படுகிறார். மற்றொருபுறம் தொட்டிலில் போடுவது தொடர்பாக ஷாரிக் மற்றும் வனிதா இடையே சண்டை ஏற்படுகிறது.

நான்தான் முதல்ல பொம்மையை தொட்டிலில் போட்டேன் என்று ஷாரிக்கிடம் வனிதா வாக்குவாதம் செய்கிறார். நிரூப் தூக்கிப்போடுகிறான். ரூல்ஸ்ஸ சரியாக கடைப்பிடிக்க மாட்டுறாங்க. அதனால் நான் கேட்கதான் செய்வேன். நான் வாய் இல்லாத பொம்மை இல்லை என ஷாரிக்கிடம் வனிதா வாக்குவாதம் செய்கிறார். எப்படி பொம்மையை போடணும் என ரூல்ஸ் கொடுக்கவில்லை என ஷாரிக் சொல்ல, உனக்கு ஏற்றாற்போல் பேசாதே வனிதா சண்டை போடும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment