தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு… சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்தது…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 59 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் கண்டது. ஆனால் அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது.இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் மகிந்திரா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,154 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,201 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 116 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.51 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.38 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.04 புள்ளிகள் குறைந்து 57,832.97 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 28.30 புள்ளிகள் சரிவு கண்டு 17,276.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment