குறும்படம் போடும் கமல்.. அதிர்ச்சியில் வனிதா !

by Column Editor

கமல் குறும்படம் போடுவதால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த நிகழ்வுகளை கமல் விசாரிக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் வெளியானது. அதில் வனிதா விளையாடிய விதம் குறித்த தகவல்களை கமல் சொல்லியிருந்தார். அடுத்த ப்ரோமோ வந்ததால் தான் முழு விபரம் தெரியும் என்று எதிர்பார்த்தோம். அதன்படியே இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பேசும் கமல், திருடன்‌ எப்படி திருட வருவான் என ஹவுஸ்மேட்டுகளை பார்த்து கமல் கேட்கிறார். அதற்கு முதலில் பதிலளிக்கும் அபினய், மற்றவர்களுக்கு தெரியாமல் எடுத்துக்கிட்டு செல்வதுதான் என்கிறார். இதே கருத்தை சினேகனும் சொல்கிறார். சரி இது அப்படியே இருக்கட்டும். போலீஸ் என்றால் என்ன என கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வனிதா, போலீஸ்காரன் என்றால் நேர்மையாக இருக்கவேண்டும், நாணயமாக இருக்கவேண்டும். அவர்களே திருடக்கூடாது என்கிறார்.

இந்த விஷயங்களெல்லாம் இவ்வளவு தெளிவாக இருக்கிறது. ஆனால் ரூல்ஸ் வேண்டாம் என்று நினைத்துவிட்டீர்களா. இல்லை புரியவில்லையா என கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வனிதா, இதில் டீம் ஒர்க் இல்லை. அதனால் தான் இந்த குழப்பம் என்று சொல்ல, ஏன் டீம் ஒர்க் இல்லை. காபிக்காக போராடின நீங்க. ஏன் டீம் ஒர்க்காக போராடவில்லை என கமல் கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து ஒரு குறும்படம் போடப்போகிறேன் என்றும், குறும்படம் தயார் செய்யும்போது அது குடும்ப படமாக மாறிவிட்டது என்று கமல் சொல்லும் வெளியாகியுள்ளது. அதனால் இன்றைய சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment