இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா?

by Column Editor

Bigg Boss Ultimate Tamil இதில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களும் அதிரடியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருத்தருக்கு ஒருவர் சண்டைகள் போடுவதில் பெரிய ஆட்கள்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்ப்பது என்பது பலருக்கும் மிகவும் பிடித்தமான விஷயமாகும். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருப்பதால் மக்கள் இந்த வகை நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கின்றனர். இதனால் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கட்டிலும் பிக் பாஸ் ஷோவின் டி.ஆர்.பி எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

கடந்த மாதம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த நிலையில், வேறொரு புது நிகழ்வை தொடங்க உள்ளதாக அறிவித்தனர். மேலும் இது குறித்து பல ப்ரோமோக்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், சுருதி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, ஜூலி, அபிராமி, தாமரை செல்வி, ஷாரிக், சுஜா வருணி, நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட எல்லா போட்டியாளர்களும் அதிரடியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருத்தருக்கு ஒருவர் சண்டைகள் போடுவதில் பெரிய ஆட்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய மிக சில நாட்களிலேயே ஏராளமான சண்டைகள் அவர்களுக்குள் தொடங்கியது. அதே போன்று பல சர்ச்சைகளும் உருவானது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ள அபிராமி புகை பிடிக்கும் அறையில் புகை பிடித்த காட்சி சில வாரங்களுக்கு முன்பு மாபெரும் சர்ச்சையை எழுப்பியது. இது குறித்து பலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வந்தனர். இது போன்ற பல சண்டைகளும், வேடிக்கைகளும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடந்து வருகிறது.

வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரந்து ஒரு போட்டியாளர் வெளியேற்ற வேண்டும் என்கிற நிலையில், முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுஜா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இதுவரை அவருக்கு தான் குறைவான வாக்குகள் வந்துள்ளது என்பதால், இந்த வாரம் எவிக்ஷனில் சுஜா வெளியேற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த உண்மையான தகவல்கள் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment