தாமரையை புறக்கணித்த போட்டியாளர்கள்: பாலா கொடுத்த தக்க பதிலடி

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5ல் கலக்கிய தாமரை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் சென்று நேர்மையாக விளையாடி வருகின்றார்.

இந்த வாரத்தில் சிறப்பாக தனது செயலை செய்தவர்கள் யார் என்று பிக்பாஸ் தெரிவு செய்ய அனைத்து போட்டியாளர்களையும் கூறியுள்ளார்.

இதில் அனைத்து போட்டியாளர்களும் வெவ்வேறு போட்டியாளர்கள் பெயரைக் கூறவே தாமரை பெயரை யாரும் கூறவில்லை.

அப்போது பாலா எழுந்து இந்த வீட்டில் அனைத்து இடங்களிலும் அவரது செயல் இருக்கின்றது… ஆனால் யாரும் அவரது பெயரைக் கூறவே இல்லை என்று கூறி போட்டியாளர்களை அமைதியாக்கியுள்ளார்.

பாலா கூறியது தாமரையை தான் என்று கூறிவரும் ரசிகர்கள் இப்படியே இவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment