கன்பெஷன் அறையில் கதறி அழுது அடம்பிடித்த பிரியங்கா – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டாரா?

by Column Editor

பிக்பாஸ் வீட்டிலிருந்து உடல்நிலை குறைவால் நேற்று மருத்துவமனைக்கு சென்று திரும்பிய பிரியங்கா இன்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் பிரியங்காவிற்கு உடல்நிலை முடியாமல் சென்றுள்ளதாம்.

இந்நிலையில் மெடிக்கல் அறைக்கு பரிசோதனைக்கு சென்ற பிரியங்காவை சோதனை முடித்த பின்பு கன்பெஷன் அறைக்கு வரவழைத்து பிக்பாஸ் சில வார்த்தைகள் பேசியுள்ளார்.

உங்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் கண்டிப்பாக வெளியேறியே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் அதனால் போட்டியாளர்களிடம் விடைபெற்று முன் கதவு வழியாக வெளியே வருமாறு கூறியுள்ளார்.

இதற்கு மறுத்த பிரியங்கா இன்னும் 2 நாட்கள் தானே இருக்கின்றது இறுதி கொண்டாட்டத்திற்கு அதுவரை தான் சமாளித்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் பிக்பாஸ் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று கூறியதால், தான் முன் கதவு வழியாக வெளியே வரமாட்டேன்… நேற்று மாதிரி இந்த கதவு வழியாக வெளியே வருகின்றேன் என்று அடம்பிடித்துள்ளார்.

பிக்பாஸும் வேறு வழியின்றி பிரியங்காவை கன்பெக்ஷன் அறை வழியாக வெளியே வரவழைத்த பின்பு ராஜு கன்பெஷன் அறைக்கு வரவழைத்து பிரியங்கா சிகிச்சை மேற்கொள்ள வெளியேறி இருப்பதாக போட்டியாளர்களிடம் கூறிவிடவும் கூறியுள்ளாராம்.

இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிந்துவிடும். ஆனாலும் பிரியங்கா பிக்பாஸை விட்டு வெளியேறிவிட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment