மசாலா இட்லி

by Column Editor

புழுங்கல் அரிசி – அரைப் படி
உளுந்து – ஒரு ஆழாக்கு
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
கடுகு – 2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – 2 துண்டுகள்
இஞ்சி – 2 துண்டுகள்
முந்திரி – 20
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – சிறிது
உப்பு – 4 தேக்கரண்டி
நெய் – 4 தேக்கரண்டி

அரிசியையும், உளுந்தையும் நீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் க்ரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். (நீர் விடாமல் அரைக்கவும்).

அரைத்தெடுத்த மாவில் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு 8 அல்லது 10 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.

8 அல்லது 10 மணி நேரத்திற்கு பிறகு, அரைத்து வைத்துள்ள மாவுடன், மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொடியாக உடைத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகு தாளித்து, சிறிதளவு உளுந்து மற்றும் கடலைப்பருப்பைப் போட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் முந்திரியைப் போடவும். பிறகு மிளகையும், சீரகத்தையும் போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து, நன்றாகக் கலந்து மூடி போட்டு சுமார் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

15 நிமிடங்களுக்கு பிறகு மாவை எடுத்து இட்லியாக ஊற்றி, இட்லி பானையில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான மசாலா இட்லி தயார்.

Related Posts

Leave a Comment