‘மன்னிச்சிடுல… நீ சோறு போடுல’ எனக் கூறி.. பாசமழை பொழியும் பிரியங்கா – தாமரை !

by Lifestyle Editor

பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் 100 நாட்களை எட்டவுள்ளது. மொத்தமுள்ள 6 போட்டியாளர்களில் ஏற்கனவே அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று ராஜு மற்றும் பிரியங்கா காப்பாற்றப்பட்டுள்ளனர். தற்போது தாமரை மற்றும் பாவனி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நீங்கள் நன்றி சொல்ல நினைக்கும் நபர் மற்றும் மன்னிப்பு கேட்க விரும்பும் நபர் யார் என்று சொல்ல போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் யார் என்று சொல்லுங்கள் என கமல் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசும் பிரியங்கா, நன்றி சொல்லவேண்டும் என்றால் அது தாமரை அக்காவிற்கு சொல்லவேண்டும். ஏனென்றால் எனக்கு சாப்பாடு போட்டு உயிர் கொடுத்த ஜீவன் அவர்தான் என்று சொல்லுவேன் என்கிறார்.

அதன்பிறகு பிரியங்காவின் அன்பிற்கு பதிலளிக்கும் தாமரை, இந்த வீட்டில் பிரியங்காவை நிறைய திட்டிருக்கேன். அதனால் என்னை மன்னிடுல என்கிறார். அதற்கு நீ சாப்பாடு போடல என யதார்த்தமாக பேசி இருவரும் அன்பை பரிமாறிக் கொள்ளும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து பிரியங்காவிடம் பேசும் நிரூப், உன்னை மாதிரி ப்ரெண்ட் கிடைக்குமா என பல ஆண்டுகள் ஏங்கியிருக்கிறேன். உன்னை கஷ்டப்படுத்தியிருந்த மன்னிச்சிக்கோ என உருகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment