”இன்னும் ஒரு வாரத்தில் எத்தனை ஆச்சரியங்கள் நிகழக்கூடுமோ ?”.. கமல் பேசும் ப்ரோமோ வெளியீடு !

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைப்பெற இன்னும் ஒரு வாரமே இருப்பதாக கமல் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வின்னராக யார் தேர்வாகவுள்ளார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது மொத்தம் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் அந்த ஜாக்பாட் யாருக்கு அடிக்க போகிறது என்ற பரபரப்பு நிலவுகிறது. இதை மெருகேற்றும் விதமாக இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இன்று சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களிடம் நேரடியாக உரையாட உள்ளார். அந்த ப்ரோமோவில் பேசும் கமல், எதிர்பாராததை எதிர்ப்பார்த்தே பழகி விட்டோம் நாம். இருப்பினும் எதிர்பாராத விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்காத இருவர், முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டனர். அதாவது அமீர் மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக சென்றுவிட்டதை குறிப்பிட்டு பேசுகிறார்.

மேலும் இறுதிவரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் திடீரென பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார் என்று சிபி சென்றதை குறிப்பிட்டு பேசுகிறார் கமல். இதைத்தொடர்ந்து பேசும் அவர், வெற்றியாளரை தேர்ந்தெடுக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் எத்தனை ஆச்சரியங்கள் நிகழக்கூடுமோ என கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment