மூன்றாவது இறுதி போட்டியாளராக நுழைந்த நபர்… அதிரடியாய் அறிவித்த கமல்

by Lifestyle Editor

இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்து கமல் பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற போகிறது. அதனால் வின்னராகப் போவது யார் என்ற பரபரப்புடன் நிகழ்ச்சி சென்றுக்கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 6 பேரில் நிரூப் மற்றும் அமீர் இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டனர். அதனால் மீதமுள்ள 4 பேரில் ஒருவர் இந்த வெளியேற போகிறார். அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்பாஸின் மூன்றாவது போட்டியாளர் யார் தெரியுமா என கமல் கேட்க போது தாமரை, பாவனி மற்றும் பிரியங்கா டென்ஷனில் இருக்கின்றனர். அப்போது பிரியங்கா தான் அந்த மூன்றாவது போட்டியாளர் என கமல் அறிவிக்கும் போது பிரியங்கா கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இதையடுத்து பேசும் கமல், மீதமிருந்த இருக்கு தாமரைச்செல்வி மற்றும் பாவனி ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறும் கமல், ஆனால் மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை என்கிறார். இதையடுத்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த கார்ட்டை எடுக்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment