6 அறையில் தவிக்கும் 6 போட்டியாளர்கள்… பிக் பாஸிலிருந்து வெளியேறப்போவது யார்?

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 100 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா என 17 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 100 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் முடிவடையும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வெளியேறிய பழைய போட்டியாளர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மிட் வீக் எவிக்ஷன் நடைபெறுகின்றது. இதற்காக 6 போட்டியாளர்களையும் ஆறு அறைக்குள் பிக் பாஸ் அனுப்பியுள்ளார். இதில் யாருடைய அறையின் கதவு திறக்கப்படவில்லையோ அவர்கள் எவிக்ட் ஆவதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

ஆனால் நேற்றைய தினமே பிக் பாஸ் மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment