இந்த வாரம் நிக்ஷனுக்கு ரெட் கார்டா?

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.

நேற்றைய தினம் நிக்ஷன் விஷ்னு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அர்ச்சனாவும் உள்ளே எண்ட்ரி ஆகினார். இந்த வாக்குவாதம் முகம் சுழிக்கும் அளவிக்கு மோசமாக இருந்தது.

நிக்ஷன் ஒரு கட்டத்தில் அர்ச்சனை சொருகிடுவேன் என்று ஆக்ரோஷமாக பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிக்ஷனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment