போட்டியிலிருந்து வெளியேறும் அந்த இரு நபர்கள்..பிக்பாஸ் 7

by Lifestyle Editor

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்தது.

இதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் போட்டியாளர்களுக்கு 5 நட்சத்திரங்களை கொடுத்து இதனை வாங்க வேண்டும் என்றால் டாஸ்க்கில் வெற்றிப் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அர்ச்சனா பக்கம் திரும்பிய விஜய் :

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அருமையாக தங்கள் பக்கம் இருக்கும் நியாயங்களையும், மற்றவர்கள் செய்யும் அநியாயங்களையும் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் போட்டியிலிருந்து மற்றவர்களை வெளியேற்ற வேண்டும் என விஜய் வர்மா தீவிரமாக வாதம் செய்து வருகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணுவை தாக்கிய விஜய் தற்போது வெளியான ப்ரோமோவில் அர்ச்சனாவை தாக்கியுள்ளார்.

இவ்வளவு நாள் வாயை மூடிக் கொண்டிருந்த விக்ரம் முதல் முறையாக குரலை உயர்த்தி பேசியுள்ளார்.

இப்படி பரபரப்பாக போட்டியாளர்கள் வாதாடி கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் எபிசோட் எப்படி இருக்க போகின்றது என்பதனை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Related Posts

Leave a Comment