முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை இயற்கையாவே நீக்கணுமா? இதோ சிம்பிளான மூன்று வீட்டு வைத்தியங்கள்…

by Column Editor

தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் பார்லர் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு சற்று அச்சமாகவே இருக்கிறது. நாம் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் முகத்தில் உள்ள சின்ன சின்ன முடிகள் நம் முகத்தின் அழகை சற்று மங்கடித்து விடுகிறது. வீட்டிலேயே சில இயற்கை வழிகள் மூலம் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் இந்த கட்டுரையில் அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

எவ்வளவு அழகாக இருந்தாலும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருந்தால் நமது அழகை அது சற்று சீர்குலைப்பது போன்றதாகும். வீட்டிலேயே நமது சமையலறையில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து எப்படி இந்த முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்.

முகத்தில் உள்ள முடிகள்:

கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக நாம் வெளியில் செல்வது என்பது சிரமமாகி இருக்கிறது. இதனால் அதிக எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டியது அவசியம். பார்லர் சென்று முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற முடியாதவர்கள் தற்காலிக வழிமுறையாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற முடியும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:

தேவையான பொருட்கள்:

2 டீஸ்பூன் சர்க்கரை
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
சிறிது தண்ணீர்

செயல்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கலந்து கெட்டியான பேஸ்ட் போல கலக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும். பின்னர் அதை சிறிது ஆறவைத்து முகத்தில் தடவவும்.

முகத்தில் ரோமங்கள் அதிகம் உள்ள இடத்தில் தடவும்போது மெதுவாக தடவவும் . 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளுங்கள். எலுமிச்சை இயற்கையான ப்ளீச்சிங் காரணியாக இருப்பதால் அதனுடன் சேர்த்த சர்க்கரை தேவையற்ற முடியை நீக்கும் பணியைச் செய்கிறது. இந்த முடி அகற்றும் முறையை வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் பின்பற்ற வேண்டாம்.

Related Posts

Leave a Comment