டிஆர்பியை எகிறவைக்க இப்படியொரு பிளானா? சரத்குமாரை இறக்கிய பிக்பாஸ்..

by Column Editor

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி சுற்றினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 93வது நாளில் இருக்கும் போட்டியாளர்களிடையே இனிமேல் கடுமையான டாஸ்க்குகள் வைக்க பிக்பாஸ் பிளான் செய்து வருகிறார்.

7 பேர் மட்டும் இருக்கும் வீட்டில் கடைசி இறுதி போட்டியின் போது 5 பேர் மட்டுமே இருப்பார்கள். அப்படியென்றால் இந்த வாரம் இருவர் வெளியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் கடந்த 4 சீசன்களாக 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே போகலாம் என்ற டாஸ்க் இருந்தது.

அதேபோல் இந்த ஆண்டு 3 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்து கொண்டு போகலாம் என்பதை நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டின் கண்ணாடி பெட்டகத்திற்குள் நின்றபடி அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் சரத்குமார் கூறும்போது 3 லட்சமாக இருக்கலாம் இல்லையென்றால் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் கூறி போட்டியாளர்களை குழம்பவைத்துள்ளார்.

Related Posts

Leave a Comment