சிலரது சுயரூபம் விஸ்வரூபம் எடுத்துள்ளது… யாரை குறிப்பிடுகிறார் கமல் ?

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் சிலரது சுயரூபம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று கமல் கூறும் ப்ரோமோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி நிறைவுபெற இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் வெற்றிப்பெறும் போட்டியாளர் நேரடியாக இறுதி நிகழ்ச்சிக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வந்தனர். இதில் சிறப்பாக விளையாடி அமீர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளார். இந்த டாஸ்க்கில் விளையாடும் போது முட்டை உடைக்கும் போட்டி நடந்தது. அந்த டாஸ்க்கில் கலந்து கொண்டு விளையாடிய தாமரை மற்றும் பிரியங்கா அடித்துக் கொண்டனர்.

இதுகுறித்து கமல் பேசும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று பேச ஆரம்பிக்கும் கமல், பாதியில் வந்த அமீர் முதல் ஆளாய் தன்னிடத்தை உறுதி செய்திருக்கிறார். கலகலப்பாக இருந்த பிக்பாஸ் வீடு தற்போது கைகலப்பு வரை வந்துவிட்டது. சிலரது சுயரூபம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று விரிவாக பேசலாம் என்று கமல் கூறியிருக்கிறார். இதனால் இன்றைய தினம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment