பிக்பாஸ் 5 ஃபினாலே டாஸ்க்… இறுதியில் வெல்லப்போகும் நபர் யார் தெரியுமா?

by Column Editor

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இறுதி போட்டிக்கு செல்வதற்கான டிக்கெட் டு ஃபினாலேவை வெல்லும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இப்போது 8 போட்டியாளர்களில் முதல் நாளில் நிரூப், இரண்டாவது நாளில் தாமரை மற்றும் பாவனி, மூன்றாவது நாளில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியிட்டனர்.

தற்போது அமீர், சிபி, சஞ்சீவ் ஆகியோர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர். இந்நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வெல்ல போட்டியிடுபவர்களில் சிபி, ஆரம்பம் முதலே இருப்பவர். ஆனால் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக 50 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள்.

வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்தவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்வது மிக அரிதானதே. இருந்தாலும் இந்த முறை அது மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் டாஸ்குகள் கடுமையாக இருக்ககூடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால் அமீர் அல்லது சிபி இதனை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், டிக்கெட் டு ஃபினாலேவை வெல்பவர்கள் யாரும் இதுவரை டைட்டிலை வென்றது கிடையாது.

அதனால் இந்த டிக்கெட் வெல்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் இந்த டாஸ்கில் வெற்றி பெறும் நபர் இறுதிவரை மக்களுக்கு பிடித்த வண்ணம் இருந்தால் கட்டாயம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது.

Related Posts

Leave a Comment