மகளை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ்… உருக்கமான ப்ரோமோ வெளியீடு

by Column Editor

தனது மகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதை பார்த்த சஞ்சீவ் கதறி அழுத காட்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் விரைவில் முடியவுள்ள நிலையில் இந்த வாரம் லக்சரி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அக்ஷரா, சிபி, ராஜூ, பிரியங்கா, நிரூப், பாவனி உள்ளிட்டோரின் உறவினர்கள் ஏற்கனவே வந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து இன்றைய தினம் தாமரையின் மகன் மற்றும் கணவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது போட்டியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே எனது குடும்பத்தினர் வரும் வரை நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கவேண்டும் என்று ஒரு டாஸ்க்கின்போது ராஜூவிடம் சஞ்சீவ் கூறியிருந்தார். இந்நிலையில் சஞ்சீவியின் மனைவி மற்றும் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். இது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது.

தனது குடும்பத்தினர் வருவதை பார்த்த சஞ்சீவி, கதறி கதறி அழுது ஆனந்த கண்ணீர் விடுகிறார். இதைத்தொடர்ந்து சஞ்சீவியின் மகள் பின்புறமாக வந்து அவரை கட்டிப்பிடிக்கிறார். இந்த காட்சிகள் ரசிகர்களிடைளே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு குடும்பத்தினரிடம் பேசும் சஞ்சீவ், தனது மகளிடம் பிக்பாஸ் எப்படியோ வந்துவிட்டாய் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

Related Posts

Leave a Comment