சூடுபிடிக்கும் பிக்பாஸின் சண்டைகள் ..!

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டை வெளியேறுமாறு தனலெட்சுமி விக்ரமனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 போட்டி மிகவும் விறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இதில் உள்ள போட்டியாளர்களில் பலர் நாம் தினமும் சீரியல்களில் பார்க்கும் பிரபலங்களாகும்.

மேலும் கடந்த வாரம் ராபட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் மைனா நந்தனி வெளியேற்றப்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, பிக் பாஸ் நேற்றைய தினம் புதிய டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இதில் போட்டியாளர்கள் ஏலியனாகவும், அதிலும் சிலர் பழங்குடியினராகவும் விளையாடி வருகிறார்கள்.

இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் போதே ஷிவினின் தாய் குறித்து தனலட்சுமி பேசியதால் சிவின் அழுது புலம்பியுள்ளார்.

இதனையடுத்து அசீம் ஜனனியை தவறான வார்த்தை பிரயோகித்து பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஜனனி பின்னர் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது விக்ரமனுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனலெட்சுமி பிக் பாஸ் வீட்டைவிட்டு விக்ரமனை வெளியேறுமாறு அழுத்தமாக கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment