பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. சென்செக்ஸ் 191 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் புள்ளிகள் 191 வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும், ஒமைக்ரான் வைரஸ் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,574 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,751 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 101 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.97 புள்ளிகள் குறைந்து 57,124.31 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 68.85 புள்ளிகள் சரிவு கண்டு 17,003.75 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment