பயத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்… கமல் சொல்லும் ஆரூடம் எதற்கு ?ப்ரோமோ-1

by Column Editor

நாமினேஷனிலிருந்து தப்பிக்க முடியுமா என்ற பயத்தில் போட்டியாளர்கள் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 76 வது நாளைத் தொட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை அடைய உள்ளதால் யார் டைட்டில் வின்னரை தட்டி சொல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதனால் போட்டியாளர்களின் தனித்திறமைகள் சோதிக்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய புதிய டாஸ்க்குள் நாள்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்க கடுமையான சவால்களை சந்தித்து விளையாடி வருகின்றனர். அந்தவகையில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சிபி, நிரூப், தாமரை, சஞ்சீவ், அமீர் ஆகிய பேரும் வெற்றிப்பெற்றுள்ளனர். இவர்கள் வெற்றிப் பெற்றுள்ளதால் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல் போட்டியாளர்களிடம் பேசவுள்ளார். அது குறித்த ப்ரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்னைப் பற்றி என்ன சொன்னால் எனக்கென்ன. நாட்டில் இருக்கும் மக்கள் எனக்கு ஓட்டளித்து காப்பாற்றி விடுவார்கள் என்று பல போட்டியாளர்கள் நம்பிக்கையாக இருந்தார்கள். இப்போது அந்த தைரியம் பயமக மாறி இருக்கிறது. மக்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. விட்டால் ஜாதகத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள். நாமினேஷனிலிருந்து தப்பித்தால் போதும் என்று போட்டியாளர்கள் நடவடிக்கைகள் மாறியுள்ளது. அதைப்பற்றி விரிவாக இன்று விவாதிப்போம் என்று கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.‌

Related Posts

Leave a Comment