பிக்பாஸ் வீடு ஜெயில்.. வெளியில் வந்தவுடன் புது சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்கள்..

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்களை கடந்து நேற்றைய தினம் இறுதி கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 ல் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், 5 பேர் போட்டியாளராக இறுதி தேர்வில் தெரிவானார்கள்.

இவர்களில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலுள்ள சர்ச்சைகள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்து விட்டன.

அந்த வகையில் பிக்பாஸ் வீடு ஜெயில் என போட்டியாளர்கள் பேசியது ட்ரெண்டாகி வருகின்றது.

புது சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த கூல் சுரேஷ், “ பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு நூலகம். நாம் என்ன புத்தகத்தை எடுக்கின்றோம் என்பதைப் பொறுத்து நமது அனுபவம் அமையும்.” என பேசியுள்ளார்.

மேலும் நிக்சன், “ சில பேர் புகழ்ந்து பேசினாங்க, சிலர் பேர் திட்டுறாங்க, வெளியில் வந்ததும் நான் என் வேலையில் கவனமாக இருந்துவிட்டேன்.

தற்போது ஒரு சில பாடல்களை எழுதி இருக்கிறேன்.” என்றார். இப்படியான கருத்துக்களை பிக்பாஸ் போட்டியாளர்களே பகிர்ந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த செய்தியை பார்த்த பலர், “ பிக்பாஸ் போட்டியாளர்களே இப்படி பேசுவது தவறானது” என கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Related Posts

Leave a Comment