பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 166 புள்ளிகள் குறைந்தது

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 166 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகத்தில் சிறிது ஏற்றம் ஏற்பட்டாலும் இறுதியில் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி. மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,806 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,502 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 117 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.97 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் குறைந்து 58,117.09 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 43.35 புள்ளிகள் சரிவு கண்டு 17,324.90 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment