ஏறி இறங்கிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 196 புள்ளிகள் வீழ்ச்சி..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 196 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு வர்த்தகம் வீழ்ச்சி காண தொடங்கியது. புதிய வகை கொரோனா வைரஸ், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை முதலீடு செய்வதை காட்டிலும் அதிகளவில் விற்பனை செய்வது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர் கிரிட் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் கோடக்மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,777 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,474 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.257.10 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.19 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 195.71 புள்ளிகள் குறைந்து 57,064.87 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 70.75 புள்ளிகள் சரிவு கண்டு 16,983.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment