பிக்பாஸில் அதிரடி எண்ட்ரி கொடுத்த சஞ்சிவ்: கணவர் குறித்து மனைவி கூறிய காணொளி

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற சஞ்சீவைக் குறித்து அவரது மனைவி நடிகை பிரீத்தி கூறியுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸில் கலந்துகொண்டுள்ள சஞ்சீவ் குறித்து அவரது மனைவியும் நடிகையுமான ப்ரீத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 53 நாட்களை கடந்து பயங்கர விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும், சவால்களும் அதிகமாகி வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் வன்மம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், வார வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்து வருகிறது. அந்த வகையில் 18 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 பேர் எலிமினேட் ஆகி தற்போது இரண்டு பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்து இருக்கிறார்கள். இரண்டாவது எலிமினேட் ஆன அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

பின் சில தினங்களுக்கு முன்பு அமீர் என்ற நடனக் கலைஞரும் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் இன்று சற்றும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்றாவது போட்டியாளராக விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி ” என் கணவரை வெளியே இருக்கும் போது எப்படி ரசித்துக்கொண்டு இருந்தேனோ, அதேபோல் பிக்பாஸ் வீட்டிலும் அவர் இருப்பதை ரசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தலையெழுத்து எப்படி மாறப்போகிறது என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment