பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 42,408பேர் பாதிப்பு- 195பேர் உயிரிழப்பு!

by Column Editor

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 42ஆயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 195பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 94இலட்சத்து 48ஆயிரத்து 402பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 42ஆயிரத்து 533பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 76ஆயிரத்து 557பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 006பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 77இலட்சத்து 29ஆயிரத்து 312பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment