அர்ச்சனாவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் சரவணன்.. ராஜா ராணி 2-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

by Column Editor

எல்லாவற்றிற்குமே காரணம் சந்தியா தான் என்று அர்ச்சனா கூற, கற்பூர தட்டை தூக்கிக்கொண்டு அர்ச்சனாவை அடிக்க கை ஓங்குகிறார் சரவணன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று – ராஜா ராணி 2. இந்தியில் ஒளிபரப்பான ‘தியா அவுர் பாதி ஹம்’ என்கிற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த ராஜா ராணி 2 என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயமே.

எப்படியாவது ஐபிஎஸ் ஆகி விட வேண்டும் என்கிற கனவுடன் இல்லற வாழ்க்கையை ஓட்டும் நன்கு படித்த நாயகி, தன் அம்மாவின் வாக்கே தெய்வ வாக்கு என்று நம்பும், அதை ஒருபோதும் மீறாமல் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் படிப்பறிவு இல்லாத நாயகன். இவர்களை சுற்றிய கதையே – தியா அவுர் பாதி ஹம். இதுதான் ராஜா ராணி 2-விலும் நடக்கிறது. இந்த சீரியலின் மேலோட்டமான கதைக்களம் பற்றி ரசிகர்களுக்கு தெரிந்து இருந்தாலும் கூட ஆல்யா மானசா மற்றும் சித்து ரசிகர்களின் பேராதரவால் ராஜா ராணி 2 சீரியல் ஆனது டிஆர்பி டாப் லிஸ்டில் எப்போதுமே இடம் பிடித்து வருகிறது.

இதற்கிடையில்ராஜா ராணி 2 சீரியலில், முன்னதாக ஒருமுறை (கதைப்படி 1 வருடத்திற்கு முன்) சிவகாமி கைது செய்யப்பட்டதற்கு பின்னணியில் யார் உள்ளார்? என்கிற உண்மை வெளிவரும் காட்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அர்ச்சனா தான் என்கிற விஷயத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் போட்டுடைக்கிறார். அதைக்கேட்டு மொத்த குடும்பமுமே ஆத்திரம் அடைகிறது; குறிப்பாக சரவணன் கடும் கோபம் கொள்கிறான். இதுபற்றி விசாரிக்கும் போது அர்ச்சனா மென்மேலும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறாள்.

தன் அம்மா இன்னமும் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார், அதை பார்த்து தடுமாறி கீழே விழுந்த தன் அப்பாவிற்கு தலையில் அடி பட்டுள்ளது, நான் தான் இரத்தம் கொடுத்து காப்பாற்றினேன் என்றெல்லாம் கதைக்கட்டுகிறார் அர்ச்சனா; மறுபுறம் இதையெல்லாம் பார்த்து செந்தில்பீதி அடைகிறான். ஒருகட்டத்தில் சிவாகாமி “உன் பொண்டாட்டி சொல்வதெல்லாம் உண்மை தான் என்று சாமி மீது சத்தியம் செய்” என்று செந்திலை கேட்கிறார். சத்தியம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் செந்தில், “பொய் சொல்லிவிட்டு தான் ஊர் சுற்ற சென்றோம்!” என்று ஒத்துக்கொண்டு, தவறுக்காக மன்னிப்பும் கோருகிறான். பிறகு குடும்பமே சேர்ந்து அவர்களை வறுத்தெடுக்கிறது.

பின் சிவகாமி கைதானது குறித்து செந்திலிடம் கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு காரணமும் அர்ச்சனா தான் என்கிற உண்மை உடைக்கப்படுகிறது. அதிர்ச்சி அடையும் செந்தில், இதுபற்றி எனக்கு தெரியாது என்று வாதிடுகிறான். அதை நம்பாத சரவணனின் அப்பா செந்திலை அடிக்கிறார்; அப்போதும் “தனக்கு எதுவும் தெரியாது” என்று செந்தில் கூற, சரவணனும் செந்திலை அடிக்கிறான். பின் குடும்பமே சேர்ந்து அர்ச்சனாவை விசாரிக்க, “இது எல்லாமாமே பொய், இது எல்லாவற்றிற்குமே காரணம் சந்தியா தான்” என்று அர்ச்சனா கூற, கற்பூர தட்டை தூக்கிக்கொண்டு அர்ச்சனாவை அடிக்க கை ஓங்குகிறான் சரவணன். இப்படியாக இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. இது சார்ந்த புரொமோ வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment