மோதலுடன் தொடங்கிய சந்திப்பு… கார்த்தியை வேலைக்கு எடுப்பாரா ரம்யா?

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த செய்தி எதுவும் நேற்றைய எபிசோடில் கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யாவுடன் மோதலில் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபா ஐஸ்வர்யாவிடம் வாங்கக்கா ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிடுகிறாள்.

என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும் செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல, நான் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள் ஐஸ்வர்யா. இந்த விஷயத்தை தீபா, மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல, அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வரு‌கிறது. மறுபக்கம் ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர, கார்த்திக் இதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வர, இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள்.

என்னை தேடி தேடி வந்து பிரச்சனை செய்கிறாயா என்று கேட்க, ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல, சரி உனக்கு வேலை போட்டுத் தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு, சம்பளம் எவ்வளவு தான் என்று அனைத்தையும் எடுத்து சொல்கிறாள். பிறகு மேனேஜரை கூப்பிட்டு இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல, அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டென்டா இரு, அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறார்.

கலகலப்பான மனிதரான மாணிக்கம் நான் உனக்கு வேலை கத்து கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார். பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல, தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட, அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment